Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முதலமைச்சரை நேரில் சந்தித்து நிவாரண நிதி வழங்கிய இயக்குனர் அமீர். வைரலாகும் புகைப்படம்

2002 ஆம் ஆண்டில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக திரைப்படவுலகில் நுழைந்தவர் அமீர். பின்னர் ‘மௌனம் பேசியதே’, ‘ராம்’, ‘பருத்தி வீரன்’, ‘ஆதிபகவன்’ போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி வெளியான ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் கடந்த மூன்று நாட்களுக்கு முன் 21 ஆண்டுகளை கடந்துள்ளது. சில திரைப்படங்களிலும் அமீர் நடித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் அமீர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்த இயக்குனர் அமீர், மிச்சாங் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Ameer meet in CM Stalin
Ameer meet in CM Stalin