சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த.
இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ என மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.
கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினியே ஒரு சில பன்ச் வசனங்களை எழுதியுள்ளாராம், அதனை தொலைபேசியில் இயக்குனர் சிவாவிற்கும் பேசிக்காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த வசனங்களை கேட்ட இயக்குனர் சிவா பஞ்ச் வசனங்கள் மிக அருமையாக இருப்பதாகவும், ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் எனவும் கூறியுள்ளாராம்.
நடிகர் ரஜினிகாந்த் இதற்கு முன் பாபா திரைப்படத்தில் இதே போல் வசனங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.