தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி பாக்யாவுக்கு தெரியாமல் ஏதாவது நெருங்கி பழகி வரும் நிலையில் இதனை நேரில் பார்த்த எழில் தன் தாத்தாவிடம் சொல்லி அழுவது போன்ற புரோமோ விடியோ இன்றைய எபிசோடில் வெளியாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து அவருடைய தாத்தா இவனுடைய ஆட்டத்திற்கு முடிவு கட்டியாக வேண்டும், கோபி பாக்யாவின் புருஷன் என்பதை ராதிகாவுக்கு தெரியப்படுத்த வேண்டும் என முடிவு செய்து கோபியும் பாக்கியாவும் இருக்கும் போட்டோவை எடுத்து கொண்டு ராதிகா வீட்டிற்கு முடியாத நிலையிலும் நடந்தே செல்கிறார்.
இதனால் கோபியின் ஆட்டம் முடிவுக்கு வருமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அப்படி இல்லையெனில் ரோட்டில் நடந்து செல்லும் நேரத்தில் கோபியின் அப்பாவுக்கு ஏதாவது சிக்கல் வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.