Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சந்தோஷத்தில் குடும்பத்தினர், ஆனந்தக் கண்ணீரில் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரெஸ்டாரன்ட் இன் அமிர்தா மற்றும் செல்வி என்ன ஆச்சுன்னு தெரியலையே போன் கூட எடுக்க மாட்டுறாங்க என்று பேசிக் கொண்டிருக்க அப்போது எழில் மற்றும் பாக்கியா அங்கு வர என்னாச்சு என்று கேட்க ஜெனியின் செழியன் சேர்ந்துவிட்ட விஷயத்தை சொல்ல சந்தோஷப்படுகின்றனர்.

செல்வி ஜெனி பிரச்சனை அமிர்த பிரச்சனையும் எல்லாத்தையும் தீர்த்து வச்சிட்ட அக்கா மாதிரி ஒரு மாமியார் கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும் என்று சொல்ல என் எழுத்து சரியா சொன்னீங்க அக்கா என்று சந்தோஷப்படுகிறார்.

பிறகு ராமமூர்த்தி மற்றும் பாக்கியா என இருவரும் செழியன் ஜெனி சேர்ந்த கதையைப் பற்றி பேசிக் கொண்டிருக்க கிச்சன்களில் இருந்து ராதிகாவும் அதைக் கேட்டுக் கொண்டிருக்க சோபாவில் உட்கார்ந்து இவர்கள் பேசுவதை கேட்டால் ஈஸ்வரி உன்னை எழுந்து வந்து செழியனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க போறேன்னு சொன்னதுனால தான் இந்த பிரச்சனையை தீர்த்து வச்ச என்ன பண்ண என்ன நடக்கும்னு எனக்கு தெரியும். அதனாலதான் அப்படி பண்ணினேன் என பிளேட்டை மொத்தமாக திருப்பி போடுகிறார்.

பிறகு ராதிகா நீங்க செழியன், ஜெனியை சேர்த்து வைக்க ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பீங்க. ஆனா அத்தை எல்லாத்தையும் அவங்க செஞ்ச மாதிரி பேசிட்டு போறாங்க உங்களுக்கு கோபமே வரலையா என்று கேட்க இதெல்லாம் என்ன புதுசா.? எனக்கு பழகிப்போச்சு நம்ம அத்தை தானே என்று ஈஸியா எடுத்துப்பேன் என்று சொல்ல நம்ப அத்தையா என்று ராதிகா கேட்க பாக்கியா எனக்கு வேலை இருக்கு என்று சொல்லி சமைக்க தொடங்கி விடுகிறார்.

அடுத்ததாக பாக்கியா சமையலை முடித்துவிட்டு ஏன் யாரும் சாப்பிட வரலை என்று மேலே சென்று பார்க்க ரூமில் செழியன் ஜெனி இனியா எழில் அமிர்தா நிலா பாப்பா என எல்லோரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஆனந்த கண்ணீர் விடுகிறார்.

பிறகு செழியன் கீழே வந்து எல்லாத்துக்கும் நீ தான் மா காரணம் ரொம்ப தேங்க்ஸ் என கட்டிப்பிடித்து கண் கலங்குகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

baakiyalakshmi serial episode-update
baakiyalakshmi serial episode-update