நாம் அன்றாடம் குடிக்கும் காபியில் இருக்கும் நன்மைகளை குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே அனைவரும் காலையில் எழுந்தவுடன் முதலில் டீ அல்லது காபி குடிப்பவர்கள் தான் அதிகம். காபி குடிப்பதில் சில நன்மைகள் இருக்கிறது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு. அதுபோன்று அளவோடு குடிக்கும் காபியும் நம் உடல் நலத்திற்கு நல்லதையே கொடுக்கிறது.
நாம் தினமும் காபி குடிக்கும்போது இருதய நோய் மற்றும் பக்கவாத பிரச்சனையிலிருந்து விடுபடலாம். மேலும் கல்லீரல் நோய் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே கருதப்படுகிறது.
இது மட்டும் இல்லாமல் டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்குவதில் இருந்து நம்மை பாதுகாக்கும். ஒரு நாளைக்கு நாம் இரண்டு அல்லது மூன்று முறை காபி குடிக்கும் போது சிறுநீரகப் பிரச்சனை அபாயத்தை குறைக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.