தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் விட்டுவிட்டு வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு முதல் மூன்று சீசன்கள் வெற்றிகரமாக பல்வேறு தடைகளைத் தாண்டி நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் முதல் வாரத்திற்கான எலிமினேஷன் நாளை நடைபெற உள்ளது. இதற்காக சனம் ஷெட்டி, ரேகா, ஷிவானி நாராயணன், கேப்ரில்லா, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் முதல் ஆளாக நடிகை ரேகா வெளியேற்றப்பட்டு விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
நடிகை ரேகாவால் பெரிய அளவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியம் இல்லை என்பதால் அவர் வெளியேற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. உண்மை என்ன என்பது இன்று இரவு தெரிந்து விடும்.