நடிகர் சென்ட்ராயன்-ஐ நாம் முடியுமா? அல்லவே. சரிதானே. பொல்லாதவன் படத்தில் அறிமுகமாகி சிலம்பாட்டம், ஆடுகளம், மூடர் கூடம் என பல படங்களில் நடித்திருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 ல் கலந்து கொண்டு பலரையும் மகிழவைத்தார். இதை விட்டு அவர் வெளியே வந்த பின் அவரின் ஆசைப்படி குழந்தையும் பிறந்தது. தற்போது படங்களில் பிசியாக இருக்கிறார்.
அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில் பொல்லாதவன் படத்தில் நடிக்கும் போது தான் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்ததாகவும், அந்த நிறுவனத்தில் உரிமையாளர் 200 டிக்கெட்டுக்களை தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக வாங்கியிருந்தார் என்றும்.
ஆனால் படம் ரிலீஸ் ஆனபோது குடும்ப பிரச்சனை காரணமாக ஆந்திரா செல்லும் சூழ்நிலை வந்ததால் அனைத்து டிக்கெட்டுகளையும் தன்னிடம் கொடுத்துவிட்டு உன் நண்பர்களுடன் படம் பார் என கூறிவிட்டு சென்றதாக கூறியுள்ளார்.
இதனால் சென்ட்ராயன் தனக்கும் தன் நண்பர்களுக்கும் போக மீதி டிக்கெட்டை பிளாக்கில் விற்றதாகவும், தன் படத்திற்கு தானே பிளாக்கில் டிக்கெட் விற்றது எனக்கு பெருமை என கூறியுள்ளார்.