பிக்பாஸ் 4வது சீசன் தொடங்கியதுமே அனிதா மற்றும் சுரேஷ் ஆகியோருக்கு கடும் சண்டை வந்தது. தொடர்ந்து இருவரும் மாற்றி மாற்றி சண்டை போட்டார்கள்.
பின் அந்த சண்டை முடிந்து அனிதா கொஞ்சம் பிரச்சனைகளில் இருந்து தள்ளியே இருந்தார். இந்த நிலையில் இன்று முதல் புரொமோ வந்துள்ளது, அதில் அனிதா கதறி கதறி பிக்பாஸிடம் அழுகிறார்.
என்னவென்றால், நான் வீட்டில் தனிமையாக இருப்பதாக உணர்கிறேன், நான் தவறு செய்கிறேனா என்பது புரியவில்லை, என் பக்கம் யாரும் இல்லை.
அவ்வப்போது எனக்கு தவறான உணர்வு ஏற்படுகிறது என கதறி கதறி அவர் அழுகிறார். இந்த புரொமோ பார்த்தவர்களுக்கு அவர் அழுவது மிகவும் கஷ்டமாக இருப்பதாக கமெண்ட் செய்கின்றனர்.
#Day23 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/6Q0nvgRFOX
— Vijay Television (@vijaytelevision) October 27, 2020