தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் சௌந்தர்யா தீபக் மற்றும் ரயானிடம் எப்படி தான் முன்னேறுவது என்று தெரியவில்லை பிஆர்டிம் வச்சி தான் நான் இவ்வளவு தூரம் வந்தேன்னு சொல்றாங்க என்று சொல்லி கண்கலங்குகிறார். சௌந்தர்யாவிற்காக நல்ல பிஆர் டீம் ஒர்க் பண்ணி இருக்காங்கன்னு மட்டும் நல்லா தெரியுது என்று பவித்ரா சொல்லுகிறார். ஒரு தப்பு பண்றா அந்த தப்பு தாண்டி ஒரு விஷயம் பண்றா அது க்யூட்டா இருக்கு அது புரமோட் பண்றதுக்கு இந்த தப்பு மறைஞ்சிடுது என்று எனக்குத் தோணுது ஜாக்லின் சொல்லுகிறார். இதையெல்லாம் கேட்டு சௌந்தர்யா கண்கலங்கி அழுகிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram