Tamilstar
Health

எல்லா வகையான சத்துகளும் அடங்கியுள்ள பாகற்காய்!

பாகற்காயில் நீர்ச்சத்து, புரதம், மாவு,கொழுப்பு, தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புத் தாது, வைட்டமின் என எல்லா வகையான சத்துகளும் அடங்கி உள்ளன. பாகற்காயை சாப்பிடுவதால் பல நன்மைகள் ஏற்படும்.

பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள், கண்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். பாகற்காய், உணவுப் பையிலுள்ள பூச்சிகளை கொல்லும். பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும்.

உடம்பில் உள்ள நரம்புகளுக்கு சக்தியை வழங்குகிறது. வயிற்றில் உள்ள பூச்சிகள் மற்றும் புழுக்களை முற்றிலும் அழிக்க உதவுகிறது.

கல்லீரலில் உள்ள வீக்கத்தை சரி செய்ய பாகற்காய் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் பாகற்காயை தொடர்ந்து சாப்பிடுவதால் அந்த நோயை முற்றிலும் குணமாக்கும்
கல் அடைப்பு மற்றும் மூல நோய் உள்ளவர்கள் பாகற்காயை சாப்பிடுவதன் மூலம் அந்த நோயை குணமாக்கலாம். மற்ற எந்த உடல் குறைபாடு காரணமாக மாத்திரை எடுத்து வந்தாலும் அந்த மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப பாகற்காயை சாப்பிடலாம்.

பாகற்காயை, அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழுக்கள் நீங்கும்.

பாகற்காயையோ, அல்லது அதன் இலைகளையோ வெந்நீரில் வேகவைத்து தினந்தோறும் சாப்பிட்டால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மேலும் குடற்புழுக்களை வெளியேற்றும்.