பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். இவர் தற்போது தமிழில் தலைவி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், நாட்டின் பெயர் மாற்றம் குறித்து நடிகை கங்கனா ரனாவத் சமூக வலைதளத்தில் தனது விருப்பத்தை கூறியுள்ளார்.
அதில், இந்தியா என்பது அடிமைப் பெயராக உள்ளது. இதனை மாற்றிவிட்டு மீண்டும் நமது நாட்டின் பழைய பெயரான பாரதம் என்பதை சூட்ட வேண்டும். இந்தியா என்பது சிந்து நதியின் கிழக்கு பகுதியை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது. இதன் காரணமாகவே ஆங்கிலேயர் நமக்கு இந்தியா என்ற பெயரை வைத்துள்ளனர். எனவே பழைய பெயரை மாற்றிவிட்டு பாரத் என்று வைப்பதே சிறந்தது என குறிப்பிட்டுள்ளார்.