நடிகை ராதிகாவின் சித்தி சீரியல் தொலைக்காட்சி தொடர்களில் மிகவும் பிரபலமான சீரியல். 1999ல் ஒளிபரப்பான இந்த சீரியலுக்கு தற்போது வரையில் ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் இந்த இரண்டாம் பாகமான சித்தி 2 சீரியல் கடந்த ஜனவரி 27 ல் இருந்து ஒளிபரப்பானது.
அதனை கொரோனா காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதால், இந்த சீரியலின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
அதன்பின் ஊரடங்கு தளர்வுகள் போடப்பட்டதால், சித்தி 2 ஷூட்டிங் சில சில முக்கிய நடிகர்களின் மாற்றங்கள் உடன் தொடங்கப்பட்டது. இதனை நடிகை ராதிகா அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை மீரா கிருஷ்ணன் இந்த தொடரில் முக்கிய வில்லியான மல்லிகா கதாபாத்திரத்தில் நடிப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாயகி தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.