Tamilstar
News Tamil News

தமன்னா மற்றும் விராட் கோலியை கைது செய்ய உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

அண்மையில் நடிகை விராட் கோலி மற்றும் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆகியோர் ஆன்லைன் சூதாட்டத்தில் காக விளம்பரத்தில் நடித்துள்ளனர்.

தற்பொழுது லாக் டவுனால் வீட்டிலுள்ள குழந்தைகள் முதல் பெரியவர் வரை இணையதளத்திலேயே தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர். எனவே சிறுவர்கள் கூட சூதாட்டத்தை கற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால்தான்,ஆன்லைனில் சூதாடிய விளம்பரங்களில் நடித்ததற்காக கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னாவை கைது செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஹேமலதா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி விசாரணைக்கு வரும் என தெரிவித்தனர்.