தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சந்தோஷ் பிரதாப். பல படங்களில் ஹீரோவாக நடித்த இவர் தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி பிடிக்க வேண்டும் என போராடி வருகிறார். மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் சந்தோஷ் பிரதாப் மீது ஒரு கிர்ஸ்ஸாகவே சுற்றிச் சுற்றி வலம் வந்தார் சுனிதா. அதேபோல் ரோஷினி ஹரிப்ரியன் மற்றும் சந்தோஷ் இடையே நல்ல நட்பு இருந்து வந்தது. இந்த நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் இருவரில் ஒருவரை கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள் என கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு சந்தோஷ் பிரதாப் ரோஷினி எனக்கு ஃப்ரெண்ட் அதனால சுனிதாவை தான் கல்யாணம் பண்ணி விடுவேன் என தெரிவித்துள்ளார். இவர் அளித்துள்ள இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.