தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. தென்னிந்திய நடிகையாக வலம் வந்த நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளான்.
நடிகர் சூர்யா நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து நல்ல திரைப்படங்களை தயாரித்து வருகிறார். சூர்யா, ஜோதிகா கார்த்தியை தொடர்ந்து சூர்யாவின் மகன் தேவ் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் உடன் சூர்யாவின் மகன் தேவ் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் சூர்யாவின் மகன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என கூறி வருகின்றனர். இந்த புகைப்படமும் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.