தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. தமிழ் சினிமாவின் அஜித் விஜய் சூர்யா என பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் இயக்குனர் ராஜ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் பெற்றோரை எதிர்த்து இயக்குனர் ராஜ்குமார் திருமணம் செய்து கொள்ள காரணம் என்ன என கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொள்வதற்கு காரணம் எதுவுமில்லை. பிடித்து இருந்தது ஆகையால் திருமணம் செய்து கொண்டேன் என நடிகை தேவயானி தெரிவித்துள்ளார். மேலும் காதலுக்கு காரணம் இல்லை என கூறியுள்ளார்.
நீ வருவாய் என படத்தில் நடிப்பதற்காக ராஜ்குமார் தன்னை சந்தித்தார். அதன் பிறகு மூன்று வருடங்களாக இந்தப் படம் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லாமல் இருந்தது ராஜ்குமார் அவர்கள் தன்னிடம் பேசியது இல்லை. பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க முன்வந்த இருப்பதாக கூறி நீங்கள்தான் படத்தில் நடிக்க வேண்டும் என தெரிவித்தார் எனவும் கூறியுள்ளார்.