தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் துருவ் விக்ரம். வர்மா படத்திற்கு பிறகு யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று அடிக்கடி செய்திகள் வெளியாகி வந்தது.
சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கு இருவருமே மறுப்பு தெரிவிக்காமல் இருந்ததால், இந்தக் கூட்டணி இணைவது உறுதிப்படுத்தப்பட்டது.
தற்போது, புத்தாண்டை முன்னிட்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதைத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார் துருவ் விக்ரம்.