நீரிழிவு நோயாளிகள் கோதுமை மாவு ரொட்டி சாப்பிட கூடாது. ஏனென்று நாம் பார்க்கலாம் வாங்க.
பொதுவாகவே நீரிழிவு நோயாளிகள் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். ஏனெனில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானால் உடலில் பல நோய்களை ஏற்படுத்திவிடும்.
ஆனால் முக்கியமாக அனைவரும் உண்ணும் உணவானது கோதுமை மாவு ரொட்டி.
ஆனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கை விளைவிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா. கோதுமை மாவில் செய்யப்படும் ரொட்டியை சாப்பிடும் போது அது சர்க்கரை அளவை கூடுதலாக அதிகரிக்க செய்கிறது.
அதற்கு பதிலாக நாம் சோள மாவில் தயாரிக்கப்படும் சப்பாத்திகளை சாப்பிட்டால் அது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் அதிலிருக்கும் நார்ச்சத்து மற்றும் புரதம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
மேலும் கொண்டைக்கடலை மாவில் தயாரிக்கப்படும் சப்பாத்தி மற்றும் ராகியில் தயாரிக்கப்படும் ரொட்டிகளை சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாகவும் மருந்தாகவும் இருக்கும்.