தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்த படத்தை தொடர்ந்து இவர் தளபதி விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.
மேலும் தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். சின்னத்திரை நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த கையோடு அட்லி மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இவர் வாங்கியுள்ள இந்த புதிய வீட்டில் விலையை கேட்டு தான் ரசிகர்கள் ஷாக்காகி வருகின்றனர்.
ஆமாம் அட்லீ வாங்கி உள்ள புதிய வீட்டின் விலை ரூ 38 கோடி என தகவல் வெளியாகி உள்ளன.
