தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து அஜித் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்தது. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அஜித்துடன் இணைவது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அதாவது, தனக்கு எல்லோரிடமும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை உள்ளது. நான் சிறு வயதிலிருந்து இவர்களை பார்த்து பார்த்து வளர்ந்துள்ளேன். லியோ படத்திற்கு அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து படத்தை இயக்குகிறேன்.
அதன் பிறகு கைதி 2 இயக்கப் போகிறேன். பிறகு அஜித் சார் உடன் இணைய வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அவரை வைத்து படத்தை இயக்குவேன் என தெரிவித்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் மத்தியில் அஜித், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் படம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.