தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் நெல்சன் திலீப் குமார். இவர் பீஸ்ட் திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தீவிரமாக உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் என பல மொழி உச்ச நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்திற்கான அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் அவர்களுக்கு ஸ்கூட்டர் ஒன்றை அன்பு பரிசாக வழங்கியுள்ளார்.