இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் தற்போது விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இவர் நீலம் பண்பாட்டு மையம் என்ற அமைப்பின் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக ‘மார்கழியின் மக்களிசை’ எனும் இசை விழாவை நடத்தி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா – பா.இரஞ்சித் இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா விரைவில் பா.இரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து விரைவில் பா.இரஞ்சித் – யுவன் கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யுவன் ஷங்கர் ராஜா தற்போது ‘ஏழு கடல் ஏழு மலை’, ‘கஸ்டடி’ உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.