திருப்பாச்சி படம் குறித்து பேசியுள்ளார் இயக்குனர் பேரரசு.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பல வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் திருப்பாச்சி. இந்தப் படத்தை இயக்குனர் பேரரசு இயக்கியிருந்தார்.
மேலும் த்ரிஷா, பசுபதி, மல்லிகா, கோட்டா சீனிவாச ராவ், மனோஜ் கே.ஜெயன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
தற்போது இந்த படம் குறித்த சுவாரசிய தகவல் ஒன்றை இயக்குனர் பேரரசு பகிர்ந்துள்ளார். அதில், திருப்பாச்சி படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் விஜய் முகத்தில் சந்தனத்தை பூசி நடித்திருப்பார் அது மிகவும் குளிர்ச்சியானது. இது மட்டும் இல்லாமல் மேக்கப்பும் போட்டுக் கொண்டதால் விஜய்க்கு சளி வந்தது மட்டுமில்லாமல் அவருடைய குரலும் மாறிவிட்டது. மேலும் விஜய் பரவாயில்லை இப்படியே முடித்து விடலாம் என்று சொல்லி மூன்று தினங்களும் மிகவும் கஷ்டப்பட்டு தான் அந்த காட்சியில் நடித்துக் கொடுத்தார் என்று பேரரசு கூறியுள்ளார்.
அவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Director perarasu about vijay in thirupachi movie