இயக்குனர் எஸ்.எஸ் ஸ்டான்லி உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர் நடிகர் இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் எஸ்.எஸ் ஸ்டான்லி. இவர் ஏப்ரல் மாதத்தில்,புதுக்கோட்டையில் இருந்து சரவணன், மெர்குரி பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இது மட்டுமில்லாமல் பெரியார், ராவணன், நினைத்தது யாரோ, ஆண்டவன் கட்டளை, பொம்மை நாயகி, மகாராஜா போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது இவருக்கு 58 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைப்பாடு காரணமாக மரணம் அடைந்துள்ளார் இவரது மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
