தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது
அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்த வருகிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தற்போது லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் மலையாளத் திரைப்படமான ஆளப்புழா ஜிம்கானா படத்தின் ஹீரோயின் அனகா மாயா ரவி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.