தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் தன்னுடைய திறமை மற்றும் விடாமுயற்சி காரணமாக இன்று பிரபல நடிகர்களின் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் அருண் விஜய். இவரது நடிப்பில் சமீப காலமாக வெளியாகும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் முதல் முறையாக இயக்குனர் ஹரியுடன் கூட்டணி அமைத்து யானை படத்தில் நடித்திருந்தார்.
ப்ரியா பவானி சங்கர், அம்மு அபிராமி, சமுத்திரகனி, போஸ் வெங்கட் என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்தப் படம் முதல் நாளில் தமிழகத்தில் ரூபாய் 4 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.