கடற்கரையில் நாம் என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.
பொதுவாகவே கடற்கரைக்கு செல்லும் அனைவரும் பொழுதுபோக்கிற்காக சில உணவுகள் சாப்பிடுவது உண்டு. ஆனால் சில உணவுகளை தவிர்ப்பது நம் உடல் நலத்திற்கு நல்லது.
அப்படி எந்தெந்த உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும் என்று பார்க்கலாம்.
முதலில் கடற்கரையில் மதிய வேளையில் அசைவ உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது உடலின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும். மேலும் சோடாவையும் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
கடற்கரையில் திறந்த நிலையில் இருக்கும் சாலட்களை சாப்பிடுவதை தவிர்ப்பது சிறந்தது.
இது மட்டும் இல்லாமல் கடற்கரையில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் அங்கு வரும் காற்று உடலை சோர்வடைய செய்து விடும்.
கடற்கரையில் இருக்கும் தேனீர்களை குடிப்பதன் மூலம் உடலில் நீரிழப்பு ஏற்படுத்திவிடும். எனவே இப்படிப்பட்ட உணவுகளை கடற்கரையில் சாப்பிடுவதை தவிர்த்து உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம்.