தமிழ் சினிமாவில் பாடகராகவும் இசையமைப்பாளராக வலம் வருபவர் கங்கை அமரன். இவர் இயக்குனராகவும் கரகாட்டக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் முகமறியான் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய போது விஜய் தன்னுடைய பெற்றோரை விலக்கி வைத்து இருப்பதாக கேள்விப்பட்டு டென்ஷன் ஆகி விட்டேன். விஜய்யை முன்னுக்குக் கொண்டு வருவதற்காக அவருடைய அப்பா எஸ்ஏசி எவ்வளவு போராடினார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
பெற்றவர்களை விலக்கி வைக்க நினைத்தால் அவர்கள் நிம்மதியாக வாழ முடியாது என விஜய் விமர்சனம் செய்து பேசி உள்ளார் இயக்குனர் கங்கை அமரன். இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
