தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எச் வினோத். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை இயக்கினார்.
இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து மேற்கொண்ட பார்வை வலிமை மற்றும் துணிவு என மூன்று படங்களை இயக்கினார்.
இவற்றைத் தொடர்ந்து எச் வினோத் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியானது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலைகள் கமல் மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொகுத்து வழங்க உள்ள காரணத்தினாலும் எச் வினோத் இயக்கத்தில் நடிக்கும் படம் தாமதமாகும் என சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக யோகி பாபு ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. யோகி பாபுவிடம் பேசி சம்மதம் வாங்கி விட்டதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.