பெருங்காயத்தில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை குறித்து நாம் பார்க்கலாம்.
நம் அன்றாடம் சமைக்கும் உணவுகளிலும் பெருங்காயம் பயன்படுத்துகிறோம். இது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து உடலில் இருக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.
அஜீரண பிரச்சனையில் அவதிப்படுபவர்களுக்கு பெருங்காயம் ஒரு மருந்தாக இருக்கிறது. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் பெருங்காயத்தை கலந்து குடித்து வந்தால் செரிமான பிரச்சனை சரியாகும்.
தலைவலிக்கு பெருங்காயத்தை பேஸ்ட் செய்து நெற்றியில் தடவி வந்தால் தலைவலி குணமாகும். இது மட்டும் இல்லாமல் வயிற்று உப்புசம் வாயு தொல்லை பிரச்சனையில் அவதிப்படுபவர்கள் பெருங்காயத்துடன் கடுகு எண்ணெய் சேர்த்து தொப்புளை சுற்றி தடவி வர வேண்டும் அப்படி தடவி வந்தால் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.