தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் மிக பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. படத்தில் பிரம்மாண்ட நாயகியாக நடிக்க வைக்க வேண்டும் என படக்குழு முடிவு செய்திருந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிப்பது கிட்டத்தட்ட 90% உறுதியாகியுள்ளது.
இந்தப் படம் இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற சீனிகம் என்ற படத்தை தழுவி உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஆண்டின் மிகப்பெரிய படமாக இப்படம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
ரஜினிகாந்த்தை மிகவும் கவர்ந்த படமாக சீனிகம் இருப்பதால் இந்த படத்தை தழுவி கதை எழுதுங்கள் என நெல்சனுக்கு கோரிக்கை வைத்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.