Tamilstar
News Tamil News

பல கோடி மதிப்புள்ள இசைஞானி இளையராஜாவின் இசைக்கருவிகள் திருட்டு, வெளியான அதிர்ச்சி தகவல்

இசைஞானி இளையராஜாவுக்கு சொந்தமான பல கோடி மதிப்புடைய இசைக்கருவிகள் திருட்டு போய் இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஒரு அரங்கில் இளையராஜா பல வருடங்களாக தனது இசைக்கருவிகள் மற்றும் குறிப்புகளை வைத்துள்ளார்.

மேலும் அந்த பிரசாத் ஸ்டுடியோவுக்கு இளையராஜாவும் இடசமந்தமான வழக்கு நிதிமன்றத்தில் உள்ளது.

இந்நிலையில் தற்போது இளையராஜாவின் அலுவலகத்தில் உள்ள பல கோடி மதிப்பிலான இசைக்கருவிகள் திருட்டு போனதாகவும், இசைக்குறிப்புகள் சேதமடைந்து இருப்பதாகவும் காவல் துறையில் இளையராஜா புகார் அளித்துள்ளார்.

மேலும் இந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.