தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். படங்களில் நடித்தபோது தன்னுடைய வேலை முடிந்துவிட்டது என எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்வதில்லை.
சமூக வலைதள பக்கங்களையும் வைத்துக்கொள்ளாத அஜித்துக்கு சுரேஷ் சந்திரா என்பவர் தான் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.
இப்படியான நிலையில் அஜித் பெயரில் சிலர் தவறாக செயல்பட்டு வருவதாக தெரிய வர அஜித் அறிக்கை ஒன்றின் மூலமாக அவர்களை எச்சரித்து இருந்தார். மேலும் மக்கள் என் பெயரில் யாராவது ஏமாற்ற முயன்றால் ஏமாறாதீர்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.
தற்போது அஜித்தை பற்றி போன்றே உலகப் புகழ் பெற்ற நடிகரான ஜாக்கி சான் தன்னுடைய நிறுவனத்தின் பெயரில் சிலர் தவறான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் யாரும் அதனை நம்ப வேண்டாம் எனவும் அறிக்கை ஒன்றின் மூலமாக தெளிவுபடுத்தியுள்ளார்.
தற்போது இந்த அறிக்கை சமூகவலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.