தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. தளபதி விஜய்யின் மகனான ஜாக்சன் சஞ்சய் தற்போது வெளிநாட்டில் சினிமா சார்ந்த பட்டப்படிப்பை படித்து வருகிறார்.
விரைவில் அவர் சினிமாவில் நடிப்பார் என சொல்லப்பட்டு வந்த நிலையில் sa சந்திரசேகர் அளித்த பேட்டி ஒன்றில் அவருக்கு இயக்குனராவதில் தான் விருப்பம் என தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சஞ்சய் முதல் படத்தை விஜயை வைத்து இயக்க மாட்டார் எனவும் விஜய் சேதுபதி வைத்து படத்தை இயக்கத் தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார். எஸ் ஏ சந்திரசேகர் பேட்டி ஒன்றில் அளித்துள்ள இந்த தகவல் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.