தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் தளபதி விஜயின் மகன் சஞ்சய் தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற உப்பெண்ணா படத்தின் தமிழ் ரீமேக் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த படத்தில் தெலுகுவில் நாயகியாக நடித்த கீர்த்தி ஷெட்டி நடிப்பார் என சொல்லப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தாலும் இது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
அதே சமயம் ஏற்கனவே பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சஞ்சய்யை தனது இயக்கத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்ய அந்த வாய்ப்பை தனது மகன் மறுத்துவிட்டார் என விஜய் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இதனால் சஞ்சய் இந்த வாய்ப்பை ஏற்று ஹீரோவாக அறிமுகமாவாரா? அல்லது மறுத்து விடுவாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது
