கடந்த சில நாட்களுக்கு முன் சாத்தான் குளத்தில் தந்தை மகன் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டை தாண்டியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்திற்கு காரணமான இரண்டு போலிசாரும் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து சினிமா. சீரியல் பிரபலங்களும் தங்கள் கருத்தை பகிர்ந்தனர். இந்நிலையில் செம்பருத்தி சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ஜனனி அசோக்கும் பேசியுள்ளார்.
இதில் அவர் சாத்தான்குளன் சம்பவம் போல என் குடும்பத்திலும் நடந்திருக்கிறது. என்னுடைய நண்பன் தன் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றில் குளிக்க சென்றபோது சுழலில் சிக்கி இறந்துவிட்டதாக கூறினார்கள்.
ஆனால் என் அண்ணனை தண்ணீருக்குள் இழுத்து கழுத்தை நெறித்து கொலை செய்திருக்கிறார்கள். இதில் காவல்துறைக்கும் தொடர்பு இருக்கிறது. இதே போல அந்த பலர் இறந்து வருகிறார்களாம்.
என் அண்ணன் எங்கள் கனவில் வந்து நடந்ததை கூறியிருக்கிறான். இதை யாரும் நம்பமாட்டார்கள் என கூறி வேதனைப்பட்டுள்ளார்.
மாப்பிள்ளை, ஆய்த எழுத்து, மௌனராகம் போன்ற சீரியல்களிலும் ஜனனி நடித்துள்ளார்.