தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது கோட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இவரது மகன் ஜாக்சன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இவர் இயக்கும் முதல் படம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
இதனைத் தொடர்ந்து இந்த படத்தில் ஹீரோவாக நடித்த விஜய் சேதுபதி, கவின் உள்ளிட்ட நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியானது.
ஆனால் தற்போது துல்கர் சல்மான் தான் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் அதற்கான இறுதி கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது என்று தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
