தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.
இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய் விக்ரம் உள்ளிட்ட பெரிய நடிகர்களை காட்டிலும் அதிக சம்பளம் வாங்கியது ஜெயம் ரவி தான் என தெரிய வந்துள்ளது.
இந்த கதையை பொருத்தவரை அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி தான் ஹீரோ. ஆகையால் அவருக்கு தான் அதிக சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.