தமிழ் சினிமாவில் பத்திரிக்கையாளர் நடிகர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். அதோடு மட்டுமல்லாமல் யூட்யூபில் படங்களை விமர்சனம் செய்வது திரையுலகப் பிரபலங்கள் பற்றி அவர்களின் தனிப்பட்ட விஷயங்களை பேசுவது என இவர் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு வருகிறார்.
ராதிகா உட்பட பலர் இவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும் இவர் மீனாவின் கணவரின் மரணம் குறித்து அவதூறாக பேசிய விஷயங்கள் பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தன. இந்த நிலையில் டான்ஸ் மாஸ்டர் கலா மாஸ்டர் அவர்கள் பேட்டி ஒன்றில் அடுத்தவர்களின் குடும்பத்தை கஷ்டப்படுத்தி சம்பாதிக்கும் பணம் தேவையா? ஒரு நடிகை நடிகையின் நடிப்பு பற்றி பேசுவது தவறு கிடையாது ஆனால் அவர்களின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து பேசுவது தவறு. அப்படி பேசுவதை பார்த்தால் கோபம் தான் வரும் என தெரிவித்துள்ளார்.