Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காந்தாரா 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வைரல்

kantara-2-movie latest update

“கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ‘காந்தாரா’ டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது. ரூ.8 கோடி செலவில் தயாரான ‘காந்தாரா’ திரைப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார்.

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சீக்வலாக இல்லாமல், ப்ரீக்வலாக உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். இதையடுத்து இப்படத்தின் கதையை இயக்குனர் ரிஷப் ஷெட்டி எழுதி வருவதாக கூறியிருந்தார். இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘காந்தாரா 2’ படத்தின் திரைக்கதையை இயக்குனர் ரிஷப் ஷெட்டி எழுதி முடித்துள்ளதாகவும் இப்படத்தின் பூஜை நவம்பர் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கதைக்காக ரிஷப் ஷெட்டி பல ஆராய்சிகளை செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.”,

kantara-2-movie latest update
kantara-2-movie latest update