சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் அதி தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை இந்த வைரஸிற்கு 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த மாநிலங்களில் தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர அஜித்தின் அறிவுறுத்தலின் படி சவாலான இடங்களில் ட்ரோன்கள் மூலமாக கிருமிநாசினி தெளிப்பதில் அஜித் தக்ஷா குரு சிறப்பாக செயல்படுவதாக கூறி கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் அஸ்வந்த் நாராயணன் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் இது குறித்த பல டேக்குகள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளன.
Kudos to Team #Dhaksha, mentored by filmstar #AjithKumar, for developing a way to sanitize large areas against COVID-19 via disinfectant drones.
Time and again, technology has proven to be critical in the fight against #COVID-19!@sugaradhana pic.twitter.com/3hwhciDZdt
— Dr. Ashwathnarayan C. N. (@drashwathcn) June 27, 2020