திரையுலகில் கருப்பு வெள்ளை காலத்திலிருந்து நடிகைகள் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தாலும் இயக்குனராக மாறுவதில் ஆர்வம் காட்டுவார்கள். அதில் பானுமதி, சாவித்ரி, விஜய் நிர்மலா ஆகியோர் ஒரு திரைப்பட இயக்குநர்களாக மாறியிருக்கிறார்கள்.
இப்போது உள்ள நடிகர்களில் சிலர்க்கு மட்டும்தான் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதில் கார்த்தி இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்தோடு இருப்பவர். இவர் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். அதோடு ஜோதிகாவும் தீவிர கதை விவாதத்தில் இருப்பதாகவும் இவரும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படங்களை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க இருக்கிறது.