நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தர்ஷன், தீனா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருந்த ‘தும்பா’ படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதையடுத்து தனது அப்பாவுடன் சமீபத்தில் இவர் நடித்த ‘அன்பிற்கினியாள்’ படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே தற்போது கீர்த்தி பாண்டியன் மிகுந்த உற்சாகத்துடன் அடுத்த கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது கீர்த்தி பாண்டியன் அவரது வீட்டில் புதிதாக பிறந்துள்ள கன்றுக்குட்டியை தனது குடும்பத்தில் ஒருவர் என்று அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் இந்த வருடம் பொங்கலுக்கு அருகில் எங்கள் தோட்டத்தில் பிறந்த மற்றொரு புதிய குடும்ப உறுப்பினரைச் சந்தியுங்கள். அசுரன், காளை மாடு.
மேலும், இவரது கால்களைப் பாருங்கள். ஒரு நாள் அவர் அவற்றைப் பயன்படுத்தி பறக்கப் போகிறார்.” என்று தெரிவித்ததுடன் மிகுந்த பாசத்துடன் அந்த கன்றுக்குட்டியை ஆறத் தழுவியுள்ள தருணங்களையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.