தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வரும் இவர் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
தமிழில் இறுதியாக உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.
இதன் காரணமாகவும் நடிகையர் திலகம் படத்திற்கு தேசிய விருது வாங்கிய காரணத்தினாலும் இவர் சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது ரூ 3 கோடி சம்பளம் கேட்பதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
