தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் நெல்சன் திலீப்குமார். கோலமாவு கோகிலா படத்தின் மூலமாக திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இவர் முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கி அதிலும் வெற்றி கண்டார்.
இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எதிர்பாராத விதமாக இந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. பீஸ்ட் படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் போதே நெல்சன் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்க போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனங்களால் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு என்னவாகும் என்ற கேள்விக்குறி அனைவர் மத்தியிலும் எழுந்த நிலையில் ரஜினியை இயக்குவது உறுதி என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பீஸ்ட் படத்தில் எதிர்மறை விமர்சனங்கள் காரணமாக இந்த படத்தில் நெல்சன் திலீப் குமாருடன் இணைந்து கே எஸ் ரவிக்குமார் பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
