வெங்கட் பிரபு-சிம்பு இவர்களது கூட்டணியில் படம் வர வேண்டும் என்பது ரசிகர்களின் பெரிய ஆசையாக இருந்தது.
ரசிகர்களின் ஆசைக்கு ஏற்ப அவர்கள் ஒரு புதிய படம் மூலம் இணைகிறார்கள் என்ற அறிவிப்பை அறிவித்தார்கள். ஆனால் சொன்ன வேகத்தில் இப்போதைக்கு படம் உருவாவதாக தெரியவில்லை என்று கூறி ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்தார்கள்.
பின் மீண்டும் எல்லா பிரச்சனைகளும் முடிய இருவரும் மாநாடு என்ற படம் மூலம் இணைந்தார்கள். பட தகவல் வந்த நாளில் இருந்தே பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.
படமும் தயாராகி ரிலீஸும் ஆகிவிட்டது. சிம்பு ரசிகர்கள் படம் செம மாஸாக இருக்க பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.
விமர்சனங்களும் நல்லபடியாக தான் வந்தது, எனவே படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
4 நாள் முடிவில் படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 30 கோடி வரை வசூலித்துள்ளதாம்.