இந்திய சினிமா தற்போது உலகம் முழுதும் மிகப்பெரும் மார்க்கெட் வைத்துள்ளது. அதுவும் சீனாவில் உள்ள மார்க்கெட் பிடிக்க ஒவ்வொரு இண்டஸ்ட்ரி ஆட்களும் போட்டி போடுகின்றனர்.
அந்த வகையின் சீனாவில் அமீர்கானுக்கு மட்டுமே மிகப்பெரிய மார்க்கெட் இருந்து வருகிறது. அவர் தற்போது ஒரு பிரமாண்ட முடிவை எடுத்துள்ளார்.
மஹாபாரதம் கதையை படமாக எடுக்க அமீர்கான் முடிவு செய்துள்ளர், இதன் பட்ஜெட் எப்படியும் ரூ 1000 கோடியை தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும், இப்படத்தில் பாகுபலி கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் பணியாற்ற முயற்சிகள் நடந்து வருகின்றதாம்.
கொரொனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்த பிறகு இப்படத்தின் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.