Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபப்பட்ட நந்தினி, சூர்யாவின் பதில் என்ன, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யாவும் விவேக்கும் தெரிஞ்ச ஆளை வட்டிக்கு விடும் ஆளாக ஒருவரை ரெடி பண்ணி இரண்டு லட்சம் பணத்தை கொடுத்து, நான் சொன்னதெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கு இல்ல, எல்லாமே நல்லா பண்ணி விடனும் என்று சொல்ல பர்பாமென்ஸ்னு வந்தா பின்னிடுவேன் சார் எப்படி அசத்த போறேன்னு மட்டும் பாருங்க என்று சொல்ல, எல்லாத்தையும் முடிச்சிட்டு எனக்கு போன் பண்ணு என்று சொல்லி விட்டு சூர்யா சென்று விட கன்னியப்பன் எப்ப வேண்டுமானாலும் பணம் கடன் கிடைக்கும் என போஸ்டரை எல்லா இடத்திலும் ஒட்டி வைக்க, நந்தினி வெளியில் வந்து இதனை கவனித்து உடனே அந்த நம்பருக்கு போன் போடுகிறார்.

சூர்யா இது நந்தினியோட நம்பர் தான் எடுத்துப் பேசு என்று சொல்லுகிறார். நந்தினி போஸ்டர் பற்றி விசாரித்து விட்டு எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது என்று கேட்க எவ்வளவு வேணும் என்று கேட்கிறார் 2 லட்சம் தேவைப்படுது என்று சொல்ல அப்போ தாராளமா வாங்கிக்கோங்க என்று சொல்லுகிறார். நந்தினி வட்டி பற்றி கேட்க அதெல்லாம் நேர்ல வந்து தான் சொல்ல முடியும் என்று சொல்லிவிட்டு அட்ரஸ் கேட்க, நந்தினியும் அட்ரஸை சொல்லிவிட இதோ இப்பவே வந்துடுறேன் என போனை வைக்க மூவரும் கிளம்பி விடுகின்றனர். உடனே நந்தினி விஜிக்கு போன் போட்டு பணம் கிடைத்த விஷயத்தை பற்றி சொல்ல, ஆச்சரியமா இருக்கு இப்படி எல்லாம் யாரும் பணம் தர மாட்டேன்னு சொல்ல மாட்டாங்களே என்று சொல்ல வரேன்னு தான் சொல்லி இருக்காங்க நான் தூங்காம கொள்ளாம கருப்பசாமியை வேண்டிக்கிட்டு இருந்தேன் அவருதான் அனுப்பியிருப்பாரு என்று சொல்லி சந்தோஷப்படுகிறார். சரி நீ பணத்தை வாங்கிட்டு போன் பண்ணு வட்டி எவ்வளவு என்பதை தெளிவாக கேட்டுக்கொள் என்று சொல்லி போனை வைக்கிறார்.

சூர்யா காரில் வரும்போது கன்னியப்பன் இடம் நீ உஷாரா இருக்கணும் அவ ரொம்ப உஷாரா இருப்பா, சொதப்பாம பேசணும் என்று சொல்லுகிறார். அந்த நேரத்துக்கு ஏத்த மாதிரி ரைமிங் டைமிங் என எல்லாத்தையும் பேசி பக்காவா முடித்து விடுவேன் என்று சொல்லுகிறார். வீட்டில் இருப்பவர்களிடம் நந்தினி பணம் விஷயத்தைப் பற்றி சொல்ல அது எப்படி கொடுப்பாங்க என்று சிங்காரம் கேட்கிறார். அம்மாச்சி ஒருவேளை மீட்டர் வண்டி, மாதிரி ஏதாவது இருக்கப் போகுது என்று கேட்க, முதல்ல பணம் வரட்டும் அப்புறம் பார்த்துக்கலாம் என்று நந்தினி சொல்லுகிறார். கன்னியப்பனை நந்தினி வீட்டு முன் இறக்கிவிட்டு சூர்யா சென்று விடுகிறார். கன்னியப்பன் காலிங் பெல் அடிக்க நந்தினி வந்து பார்த்துவிட்டு உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று சொல்லிவிட்டு நீங்கதானே சூர்யா சாருக்கு பாரின் சரக்கு விக்கிறவர் தானே நீங்க என்று சொல்ல ஆமாமா இப்ப அப்படியெல்லாம் பண்றது இல்ல அந்த தொழிலை மாத்திட்டு நான் வட்டிக்கு விட்ற தொழிலுக்கு வந்துட்டேன் என சொல்ல நந்தினி அப்ப என்கிட்ட பரமசிவம்னு சொன்னீங்க, ஆமா பரமசிவன் சொன்ன கன்னியப்பன் என்றது அந்த தொழிலுக்காக இப்போ தொழில மாத்துனதுனால பேரையும் மாத்திட்டேன் என சொல்லுகிறார்.

ஒருவழியாக நந்தினி சமாளிக்க உள்ளே அழைத்து வருகிறார். பிறகு குடும்பத்தினரிடம் அறிமுகம் படுத்தி வைக்க, கன்னியப்பன் கொஞ்ச நேரத்தில் நான் கிளம்புறேன் என்று சொல்ல எதுக்கு போறேன்னு சொல்றீங்க என்று கேட்க முன்னாடி நீங்க யாருன்னு தெரியாது ஆனா இப்போ நீங்க சூர்யா சாரோட சம்சாரம் இந்த விஷயம் சூர்யா சாருக்கு தெரிஞ்சா என்ன கொன்னே போற்றுவாரு என்று கிளம்பப் போக, சிங்காரம் திடீர்னு இப்படி சொன்னா எப்படி தம்பி என்று கேட்கிறார். எனக்கு இப்ப தானே தெரியுது போன்ல பேசுனது இவங்கதான்னு தெரிஞ்சா நான் அப்பவே வெச்சிருப்பேன் என்று சொல்ல, நாங்க எந்த காலத்திலையும் சூர்யா சாருக்கு இந்த விஷயம் தெரியாம நாங்க பாத்துக்கிறோம் நாங்க சொல்ல மாட்டோம் நம்புங்க என்று சொல்ல, அப்போ சத்தியம் பண்ணுங்க என்று சொல்ல நந்தினியும் சத்தியம் செய்கிறார். உடனே கன்னியப்பன் பணம் கொடுக்க சம்மதிக்க, நந்தினி நீங்க எதுக்கு அந்த தொழிலில் இருந்து இதற்கு வந்தீங்க என்று கேட்க போலீஸ்காரங்க தொல்லை தாங்க முடியல அதனால தான் இந்த தொழிலுக்கு வந்துட்டேன் என்று சொல்லுகிறார். அதே மாதிரி சூர்யா சாருக்கும் இந்த விஷயம் தெரியாம பாத்துக்கோங்க என்று சொல்ல நான் சொல்ல மாட்டேன் என்று உறுதியாக சொல்லுகிறார். இதுக்கு ஷுரிட்டி என்ன என்று கேட்க, வெளி ஆள் என்றால் பரவால்ல தெரிஞ்ச புள்ளைக்கு எப்படிமா கேட்க முடியும் என்று சொல்லுகிறார்.

அம்மாச்சி உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு தம்பி காபி போடுற குடிச்சிட்டு போங்க என்று சொல்ல அதெல்லாம் வேண்டாம் என சொல்லுகிறார். வட்டி எவ்வளவு என்று கேட்க, உங்களால் என்ன முடியுமோ அதை கொடுங்க என்று சொல்லிவிட்டு கன்னியப்பன் கிளம்ப போக அம்மாச்சி ரொம்ப நன்றி என சொல்லுகிறார்.சூர்யா ஏற்பாடு செய்த நபர் நந்தினி இடம் பணத்தை கொடுக்க சூர்யா சாருக்கு தெரியாம பாத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு போக நந்தினி சொல்ல மாட்டேன் என சொல்லிவிட்டு கொஞ்ச நேரத்தில் நந்தினி புனிதாவிடம் பேக் எடுத்துவிட்டு வருமாறு சொல்லி பணத்தை போட்டுக்கொண்டு கிளம்ப அம்மாச்சி எதுக்கு அவசரம் அவசரமா போகணும் என்று கேட்கிறார். முதல்ல இந்த பணத்தை அவங்ககிட்ட கொடுக்கணும் அப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து சூர்யா வருகிறார் வந்து உட்கார்ந்தவுடன் வாங்க போகலாம் என்று கூப்பிட இப்பதானே வந்த அதுக்குள்ள எங்க போகணும் என்று கேட்க உங்க வீட்டுக்கு தான் என்று சொல்லுகிறார் அம்மாச்சி உங்க வீடுன்னு சொல்ல கூடாது நம்ம வீடுன்னு சொல்லி பழகு என்று சொல்ல இப்ப ரொம்ப முக்கியம் என்று நந்தினி சொல்லுகிறார் அதற்கு சூர்யா ஒரு லட்சம் ரெடி பண்ணாம வீட்டு வாசப்படி ஏற மாட்டேன்னு சொன்ன இப்ப மட்டும் எப்படி என்று கேட்க அதற்காக தான் போகணும்னு சொல்றேன் என சொல்லி ரெண்டு லட்சத்தை எடுத்துக்காட்டுகிறார் உடனே சூர்யா எதுவும் தெரியாதது போல் வாவ் சூப்பர் நந்தினி என்று சொல்லி எப்படி ரெடி பண்ண என்று கேட்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சூர்யாவுடன் காரில் வந்து கொண்டிருக்க விஜி போன் போட்டு நீ கொடுத்த நம்பர் கரெக்டு தானா என்று கேட்க ஆமாம் என்று சொல்லுகிறார் நான் போன் பண்ணா என்னென்னமோ திமிரா பேசுறான் என்று சொல்லுகிறார்.

உடனே சூர்யாவிடம் ஒரு பொண்ணுக்கு காசு கொடுக்க சொன்னிங்க ஆனா அந்த போஸ்டர் பார்த்துட்டு எல்லாரும் போன் பண்ணி கேக்குறாங்க சார் என்று சொல்ல நந்தினி அதைக் கேட்டு விட்டு காரில் இருந்து இறங்கி உங்ககிட்ட காசு பணம் இருந்தது என்றால் என்னிடம் ஏமாத்தி எதுக்கு இப்படி பண்றீங்க என்று கேள்வி கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


moondru mudichu serial today episode update 08-05-25