Tamilstar
Health

நீரிழிவு நோயை விரட்டும் முருங்கை..

Moringa to ward off diabetes

நீரிழிவு நோயாளிகளுக்கு முருங்கை ஒரு நல்ல மருந்தாக இருக்கிறது.

பொதுவாகவே நீரிழிவு நோய் அதிகரித்துக் கொண்டே வருகிறது இதனால் ஆரோக்கியம் சீர்கேடு ஆகிறது. நீரிழிவு நோய் வந்தால் நம் உடலில் பல்வேறு உறுப்புகளை பாதிக்கிறது. இந்த நோயை கட்டுப்படுத்த முருங்கை மரத்தில் இருக்கும் ஒவ்வொன்றும் உதவுகிறது. முருங்கை மரத்தில் இருக்கும் முருங்கைக்கீரை முருங்கைக்காய் முருங்கை விதை போன்ற அனைத்தும் நீரிழிவு நோயை விரட்ட முக்கியத்துவம் வகிக்கிறது.

முதலில் முருங்கை இலை மற்றும் விதை பூக்களை நன்றாக உலர்த்தி பொடியாக செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த பொடியை சூடான நீரில் காலை மற்றும் இரவு தூங்கும் போது குடித்து வரவேண்டும்.

முருங்கை இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து அதனுடன் தேனை சேர்த்து நன்றாக கலந்து குடித்து வர வேண்டும். அப்படி குடித்தால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும்.

மேலும் முருங்கை பூவில் அதிக ஆரோக்கியம் நிறைந்த தாமிரம் பாஸ்பரஸ் போன்ற தனிமங்கள் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையும் நீக்கும்.

இது மட்டும் இல்லாமல் முருங்கைக்காயில் கசாயம் செய்து குடிப்பதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தி வயிற்றில் வளர்சிதை மாற்ற விகிதமும் அதிகரிக்கும்.

இப்படி முருங்கையில் இருக்கும் இலை விதை பூ காய் போன்றவற்றை பயன்படுத்தி சர்க்கரை நோயை எளிதாக விரட்ட முடியும் ஏனெனில் முருங்கையில் இருக்கும் அற்புத பயன்கள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து நச்சுத்தன்மையை நீக்குகிறது.