சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளி திரையில் கலக்கி வருபவர் மிருணால் தாக்கூர். பாலிவுட் திரை உலகில் பிஸியான நடிகையாக வலம் வரும் இவர் சீதாராமம் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் இதற்கு இடையில் தனது சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து விதவிதமாக எடுக்கப்படும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் புடவையில் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் அழகான புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram